ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தை இயக்கியவர் இவர்தான். கடந்த வருடம் 'ஸ்கூல் பஸ்' என்கிற தோல்விப்படத்தை கொடுத்த ரோஷன் ஆண்ட்ரூஸ், அடுத்ததாக நிவின்பாலியை வைத்து 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இருவரும் தான் கதை எழுதுகிறார்கள் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையனான 'காயம்குளம் கொச்சுன்னி' என்பவனின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப்படத்தில் படமாக்கவுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்
காயம்குளம் கொச்சுன்னி என்பவன் கேரளா பார்டரை விட்டு தாண்டிவந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர்போனவன்.. அதிலும் களரி சண்டையில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டுள்ளார்.. ஆனால் கடந்த ஒரு வருடமாக பேச்சளவிலேயே இருந்துவந்த இந்தப்படம் ஒருவேளை கைவிடப்பட்டதோ என்கிற நிலைக்கும் தள்ளப்பட்டது.. ஆனால் இப்போதோ இந்தப்படம் உருவாவது உறுதி என்கிற விதமாக ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.