ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில மாதாங்களுக்கு முன் திடீரென ஒருநாள் “பிருத்விராஜ் டைரக்சனில் நான் நடிக்கிறேன்.. படத்தின் பெயர் லூசிபர்' என்று ஒரு திரியை கொளுத்தி போட்டுவிட்டார் மோகன்லால்.. நாளுக்கு நாள் அதுகுறித்து ஆளாளுக்கு தாங்களாக யூகம் செய்து பல விஷயங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள் இருதரப்பு ரசிகர்களும்.. ஆனால் நடிகர் முரளிகோபி கதையில் பிருத்விராஜ் இயக்கத்தில் நான் நடிப்பது மட்டுமே இப்போது வரையிலான செய்தி.. அதனால் வேறெதையும் நம்பவேண்டாம் என சமீபத்தில் கூறியுள்ளார் மோகன்லால்..
இது குறித்து அவர் கூறும்போது, பிருத்விராஜும் முரளிகோபியும் இப்படி ஒரு கதை இருக்கிறது என என்னிடம் வந்து சொன்னபோது உண்மையிலேயே அது பிடித்துப்போனது.. அதனால் தான் உடனே ஒப்புக்கொண்டேன்... ஆனால் இன்னும் பல கட்ட விவாதங்களுக்கு பின்னரே அது முழுமையடையும். அதனால் அந்தப்படம் எப்போது ஆரம்பிக்கும் என இப்போதே சொல்லமுடியாது” என கூறியுள்ளார் மோகன்லால்..
பிருத்விராஜைப்போல நீங்களும் டைரக்சனில் இறங்குவீர்களா, என மோகன்லாலிடம் கேட்டால், “அய்யோ.. அது மிகப்பெரிய வேலை.. நான் நடித்த சில படங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில காட்சிகளை நானே இயக்கியுள்ளேன்.. ஆனால் முழுப்படம் இயக்குவது என்பது நிச்சயமாக எனக்கு சரிப்பட்டு வராது. நானும் கூட ஒரு படம் இயக்குகிறேன் என சும்மா இயக்கிவிட்டு போகலாம். ஆனால் அது சினிமாவுக்கு நான் செய்யும் மரியாதையாக இருக்காது.. பிருத்விராஜூக்கு டைரக்சன் ஆர்வம் இயல்பாகவே இருக்கிறது.. அவரைப்போல என்னால் ஆக முடியாது” என கூறியுள்ளார் மோகன்லால்.