ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது.. ஆச்சர்யஹ்திலும் ஆச்சர்யமாக, அதேசமயம் அதிர்ச்சி தரும் விதமாக, துல்கர் சல்மான் நடித்த படங்களில் முதன் முதலாக 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாகவும் இது இடம்பிடித்தது.. கேங்ஸ்டர் வகைப்படமான இதில் வெட்டு, குத்து என ஓரளவு வன்முறை இருந்தாலும் கூட, இதற்கு முன் யு/ஏ சான்றிதழ் வாங்கிய பல படங்களில் இருந்த அளவுக்கு இதில் பயங்கர வன்முறை காட்சிகளும் இல்லை.. ஆபாசம் துளியும் இல்லை... இதே சந்தேகத்தைத்தான் நடிகை மஞ்சு வாரியரும் கிளப்பியுள்ளார்.
நேற்று முன் தினம் 'கம்மட்டிப்பாடம்' படத்தை பார்த்துவிட்டு வந்த மஞ்சு வாரியர் படத்தையும் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பையும் வானளாவ புகழ்ந்துள்ளார்.. இதில் துல்கர், வினாயகன், அவரது அண்ணனாக நடித்த மணிகண்டன் உட்பட பலரும் கதையின் நாயகர்களாக வாழ்ந்திருந்தார்கள் என்றும், அதனால் தான் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அந்த கதாபாத்திரங்களும் நம்முடன் வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் மனதைவிட்டு இன்னும் அகல மறுப்பதாகவும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.. அனைவரும் பார்க்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்கு சென்சார் போர்டு எந்த அடிப்படையில், என்ன காரணத்தை முன்வைத்து 'ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளதோடு, நல்ல படத்தை இப்படி சான்றிதழ் கொடுத்து முடக்கும் சென்சாரின் போக்கு மாறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார.