நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு அடுத்த இடத்தில் பயணித்து வந்தவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த 2016ல் நடிகை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பிறகு திரையுலகிலும் பர்சனல் ஆகவும் நிறைய பிரச்சனைகளை சந்தித்த திலீப் திரையுலகில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த எட்டு வருடங்களில் ஓரிரு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019ல் வெளியான கோடதி சமக்சம் பாலன் வக்கீல் என்கிற படம் தான் கடைசியாக அவருக்கு ஒரு டீசன்டான வெற்றியை பெற்று தந்தது.
அதன் பிறகு இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து வெளியான அவரது ஏழு படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதிலும் கடைசியாக வெளியான பாந்த்ரா மற்றும் கடந்த மாதம் வெளியான தங்கமணி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த நிலையில் தங்கமணி படம் வெளியாகி சரியாக 50 வது நாளில் வரும் ஏப்-26 ஆம் தேதி திலீப் நடித்துள்ள பவி கேர் டேக்கர் என்கிற படம் வெளியாக இருக்கிறது.
வினீத் குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான திலீப்பின் மூன்று படங்களும் சீரியஸான கதையம்சம் கொண்டதாக இருந்ததன. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வழக்கமான ஒரு திலீப் படமாக உருவாகியுள்ளதாம். அதனால் இந்த பவி கேர்டேக்கர் படம் திலீப்புக்கு ஒரு வெற்றி படமாக அமைந்து அவரை கை தூக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.