ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
பொதுவாக தென்னிந்திய அளவில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியான பிறகு நான்கு வாரங்களிலேயே வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீடு தாமதமாக வெளியானது. மேலும், தியேட்டர்களிலும் தொடர்ந்து நல்ல கூட்டத்துடன் ஓடியதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
அடுத்த வாரம் மே 3ம் தேதிதான் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகே வெளியாகிறது. இருப்பினும் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பத்து வார இடைவெளியைக் கூட ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டதாம்.
மலையாளத் திரையுலகத்தில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.