Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயசுதாவின் செல்போனை பிடுங்கி வைத்த மோகன்பாபு : வைரலாகும் வீடியோ

26 செப், 2023 - 01:17 IST
எழுத்தின் அளவு:
Mohanbabu-grabs-Jayasudhas-cell-phone

தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் நூறாவது பிறந்தநாள் சமீபத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட இளம் முன்னணி நடிகர்களும் கூட இந்த விழாவில் தவறாமல் கலந்து கொண்டனர். அந்தவகையில் அந்த விழாவில் வில்லன் நடிகர் மோகன் பாபு மற்றும் குணச்சித்திர நடிகை ஜெயசுதாவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையேறி பேசிக்கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் நாகேஸ்வரராவின் பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அதை மோகன்பாபு சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு இடைஞ்சல் செய்வது போல அருகில் இருந்த ஜெயசுதாவின் செல்போன் தொடர்ந்து ஒலிப்பதும் பின்னர் ஜெயசுதா அடிக்கடி தொடர்ந்து செல்போனில் உரையாடுவதுமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் இது மோகன்பாபுவை எரிச்சலுட்டியது, இதனைத் தொடர்ந்து படக்கென ஜெயசுதாவின் செல்போனை அவரிடம் இருந்து பறித்த மோகன்பாபு, நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி கவனிக்குமாறு அவரிடம் கூறியுள்ளார். மோகன்பாபுவின் இந்த செயலால் முதலில் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தாலும் அதன்பிறகு அவர் காமெடியாக தான் இதை செய்தார் என்பதை உணர்ந்து கொண்டு நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்தார்.

இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பிரபலங்களாக இருந்தாலும் தங்களது செல்போனை அணைத்து வைத்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்க வேண்டும், மோகன் பாபு சரியாக தான் செய்திருக்கிறார் என கூறினாலும் ஒரு சிலரோ மோகன்பாபுவின் இந்த செயல் ஏற்புடையதல்ல என்றும் கூறி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஆர்டிஎக்ஸ்100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ... அக்., 3ல் 'டைகர் நாகேஸ்வரா ராவ்' டிரைலர் அக்., 3ல் 'டைகர் நாகேஸ்வரா ராவ்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in