ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்கிற படம் வெளியானது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி வசூல் ரீதியாக சரிவையும் சந்தித்தது. அதே நேரத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றதால் போலா சங்கர் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு பேசப்பட்ட 65 கோடி ரூபாய் சம்பளத்தை செட்டில் செய்யும்படி சிரஞ்சீவி கறாராக தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடம் பிடிவாதம் காட்டினார் என்றும், இதற்காக தனது சொத்து ஒன்றை பிணையாக வைத்து சிரஞ்சீயின் சம்பளத்தை தயாரிப்பாளர் அனில் சுங்கரா செட்டில் செய்தார் என்றும் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறும்போது, “தற்போது ஆன்லைனில் இந்த படம் தொடர்பாக சுற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” என்று மறுத்துள்ளார்.