முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
கடந்த 2017ல் கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளானார். அந்த நிகழ்வு வீடியோவாகவும் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பாக 10 பேர் கைதாகினர். இதில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனில் என்பவனும் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் சேர்க்கப்பட்டனர். 3 மாத சிறைத் தண்டனை அனுபவித்து பின் ஜாமினில் வெளியே வந்தார் திலீப். தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கேரளாவின் முதல் பெண் டிஜிபியும் ஓய்வுபெற்ற முன்னாள் சிறைத்துறை டிஜிபியுமான ஸ்ரீகலா என்பவர் நடிகர் திலீப் ஒரு அப்பாவி என்றும் இந்த வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் என்பவனும் அவனது கேங்கும் இதுபோன்று இன்னும் பல நடிகைகளிடம் அத்துமீறி தாக்குதல் நடத்தி அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளன.. அவை வெளியே தெரியவில்லை” என்கிற ஒரு புதிய தகவலையும் கூறினார். இந்த நிலையில் முன்னாள் டிஜிபி ஸ்ரீகலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேராசிரியர் ஒருவர் திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “டிஜிபி ஸ்ரீகலா பொறுப்பில் இருந்தபோது அவருக்கு பல்சர் சுனில் பற்றியும் அவன் ஏற்கனவே பல நடிகைகளிடம் இதுபோன்று நடந்துள்ளதும் தெரிந்து இருக்கிறது. ஆனால் அவர் ஏன் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கேரள போலீசார் முன்னாள் டிஜிபி ஸ்ரீகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.