பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணவத். தற்போது 'தலைவி' தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் கங்கனா. கடந்த இரண்டு தினங்களாக மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் நடக்கும் கலவரங்கள் குறித்து தன்னுடைய டுவிட்டர் கணக்கில் அடிக்கடி பதிவுகளை இட்டு வந்தார்.
நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
அவருடைய சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை தடை செய்துவிட்டது. தொடர்ந்து அவருடைய கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என டுவிட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.