‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்தி முழுக்க பிரபலமான தொடர் மகாபாரதம். இந்த தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் சதீஷ் கவுல். அதன் பிறகு விக்ரம் அவுர் பேட்டால் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 'பியார் தோ ஹோனா ஹை தா' மற்றும் 'ஆன்ட்டி நம்பர் ஒன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
74 வயதான சதீஷ் கவுலுக்கு கடந்த 8ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான் ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.