படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
80களில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இன்றைக்கு வாத்தி கம்மிங் மாதிரி அன்றைக்கு ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் என்று பாடி ஆடித் திரிந்தார்கள் 80ஸ் கிட்ஸ். தமிழில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்துள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்தில் வில்லனாக நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் எம்.பி.யாக இருந்தார். மேற்கு வங்கத்தை குலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று கோல்கட்டாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். "நண்பர் மிதுன் சக்ரவர்த்தியை பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.
மிதுன் பேசும்போது, என்னை சாதுவான பாம்பு என்று நினைத்துவிடாதீர்கள். நான் ராஜ நாகத்தை போன்றவன். ஒருமுறை தீண்டினாலே உயிர் போய்விடும், என அவரது திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை, மேடையில் பேசி கைதட்டல் பெற்றார்.