சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படம், ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார், சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா நடித்த கோகிலா கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் அல்லல்படும் இந்த நேரத்தில் படப்பிடிப்பா என்று கூறி படப்பிடிப்பு தளத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் வலியை கண்டுகொள்ளாத பாலிவுட் நட்சதிரங்களுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் இயக்குனர் சென்குப்தா விவசாயிகளிடம் பேசினார். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள். எங்கள் ஆதரவை டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். மற்ற பாலிவுட் நட்சத்திரங்களிடம் உங்களுக்கு ஆதரவு திரட்டுவோம். என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜான்வி கபூர் தனது டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவான பதிவை வெளியிட்டார். அதில் "விவசாயம் தான் நம் நாட்டின் இதயம். நம் தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நன்மை தரும் முடிவுகள் ஏற்படும் என்று நம்புகிறேன்". என்று தெரிவித்துள்ளார்.