‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான்கானுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர்களில் ஒருவர். இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவார்கள் என்றுகூட சொல்லப்பட்டது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷெட்டி, சல்மான்கான் தனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்றும் அவருடன் டேட்டிங் சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கும், சல்மான்கானுக்குமான நட்பை பற்றி குறிப்பிட்டு தன்னை சல்மான் கான் நெகிழவைத்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு, அல்லது பார்ட்டிக்கு சென்றுவிட்டு வரும்போது ஷில்பாவை வீட்டில் இறக்கிவிடும் சல்மான், அவரது தந்தையுடன் பார் டேபிளில் அமர்ந்து சில பெக்குகளை உள்ளே தள்ளியபடி கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்வாராம். ஷில்பாவின் தந்தை இறந்த செய்தி கேட்டதும், அவரது வீட்டிற்கு சென்ற சல்மான்கான் நேராக அந்த பார் டேபிளில் சென்று அமர்ந்துகொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாராம். சல்மான்கான் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இந்த நிகழ்வு மனதில் தோன்றி தன்னை நெகிழ வைத்து விடுகிறது என மேலும் கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.