‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இன்று மதியம் திடீரென அந்த அபார்ட்மென்ட்டில் தீப்பிடித்தது.. ஆனாலும் தீப்பிடித்தது கிட்டத்தட்ட அபார்ட்மென்ட்டில் உச்சிப்பகுதியில் இருக்கும் 33-வது தளம் என்பதால் கீழே உள்ள பிளாட்டுகளுக்கு தீ அவ்வளவாக பரவவில்லை.
அதற்குள் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை கிட்டத்தட்ட நூறு பேர்களை அந்த தீப்பிடித்துள்ள பகுதியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இன்னும் மீட்பு பணி தொடர்கிறது. இந்த அபார்ட்மென்ட்டில் தீபிகா படுகோனின் பிளாட் 26வது புளோரில் உள்ளது. அவர் தற்போது வெளிப்புற படப்பிடில் கலந்து கொண்டுள்ளார். நல்லவேளையாக இந்த விபத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.