‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி. திவாலே, ஹேப்பி நியூ ஈயர், சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒண், தூம், யோதா ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்தவர்.
இவர் மீது ஐதரபாத்தைத் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹயத் நகர் போலீசில் புகார் அளித்தார். தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முரானி தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டுவதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஹயத் நகர் போலீசார் மொரானி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த மொரானி தெலுங்கான மாநில செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றிருந்தார். மொரானி ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்டராம் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். இந்த தகவலை அவர் கோர்ட்டில் தெரிவிக்காததல் அவரது முன்ஜாமீனை கோர்ட் விலக்கி கொண்டது. அதைத் தொர்ந்து ஐதராபத் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மொரானி நேற்று முன்தினம் ஹயத்நகர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர் பின்னர் அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.