‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னை : நடிகர் ரஜினி நடிக்கும், காலா படத்திற்கு, பூந்தமல்லி அருகே, தனியார் பொழுது போக்கு பூங்காவில், பிரம்மாண்டமான, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், காலா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினி, சமீபத்தில் சென்னை திரும்பினார். அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, மும்பை செல்ல உள்ளார்.
பூந்தமல்லியை அடுத்த, பழஞ்சூர் பகுதியில், புதியதாக திறந்து மூடப்பட்ட தனியார் பொழுது போக்கு பூங்கா, தற்போது சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த இடத்தில், காலா படத்திற்கு பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பூந்தமல்லியை அடுத்த, மேப்பூர் பகுதியைச் சேர்ந்த, மைக்கேல் என்ற ராஜேஷ் 31, அப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர், கீழே இருந்த மின் ஒயரை மிதித்தார். அதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட ராஜேஷுக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. சக பணியாளர்கள், ராஜேஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.