‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். அரசியல் பேசிய இப்படம் வெற்றி பெற்றது. இதையே ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் பூரி முக்கிய ரோலில் நடித்திருந்தனர். தமிழ் அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், அனைவராலும் இப்படம் பாராட்டப்பட்டது. அதேப்போன்று சிவா இயக்கத்தில் தமிழில் வெளியான சிறுத்தை படம் ஹிந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீ-மேக்கானது. அக்ஷ்ய் குமார் நடிக்க, படம் சூப்பர் ஹிட்டானது. பிரபுதேவா இயக்கினார்.
இந்நிலையில் இப்போது நாயக் மற்றும் ரவுடி ரத்தோர் படங்களின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதும் பணி துவங்கியுள்ளது. இதை இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் பாகுபலி படத்தின் கதாசிரியரும், ராஜமெளலியின் அப்பாவுமான கேவி விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது... "நாயக் மற்றும் ரவுடி ரத்தோர் 2-க்கான கதையை எழுத தொடங்கியுள்ளேன். இன்னும் முடியவில்லை, ஆகையால் மேற்கொண்டு இதுப்பற்றி எதுவும் கூற இயலாது. ஒரு படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு பாகத்திற்கு கதை எழுதுவது ஹிந்தியில் இது தான் முதல்முறை. அடுத்தாண்டு இதன் படப்பிடிப்புகள் துவங்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.
கேவி விஜயேந்திர பிரசாத் தான் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.