‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. அதையடுத்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இன்ஞ்சினியர் வேடத்தில் நடிக்கும் இந்த படம் நாமக்கல் கதைக்களத்தில் உருவாகிறது. அதன்காரணமாக முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தியவர்கள், இரண்டாம் கட்டபடப்பிடிப்பை கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல்லில் முகாமிட்டு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் தான் யூனிட் சென்னை திரும்பியிருக்கிறது.
மேலும், இந்த படம் மெடிக்கல் திரில்லர் கதையில் உருவாகிறது. மெடிக்கல் துறையில் நடக்கும் சில அசம்பாவிதங்களை வெளிச்சம் போட்டு காட்டும் கதையாம். சமீபத்தில் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் வெளியான குற்றம் 23 படமும் மெடிக்கல் துறையில் நடக்கும் ஒரு திடுக் சம்பவங்களைதான் வெளிச்சம் போட்டது. அதேபோல் இந்த ஐங்கரன் படமும் இன்னொரு அதிர்ச்சி தரும் திடுக் சம்பவத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறதாம்.