ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஓம் புரியாக நடிக்க என்னை விட யாரும் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஓம் புரி சமீபத்தில் இறந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஓம் புரியின் மறைவுக்கு மும்பையில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது... ‛‛ஓம் புரியுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அருடைய ரோலில் என்னை விட யாரும் சிறந்து நடிக்க முடியாது. அவரைப்பற்றி படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். அவரின் இரங்கல் கூடத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. அவரைப்பார்த்தாலே ஒருவர் மனதில் உள்ள அழுத்தம் எல்லாம் குறைந்துவிடும், அந்தளவுக்கு எல்லோரிடத்திலும் எளிமையாகவும், அன்பாகவும் பேசக்கூடியவர். சிறு கிராமத்திலிருந்து வந்து பெரிய நடிகனாக வர வேண்டும் என்று கனவோடு இருப்பவர்களுக்கு ஓம் புரி ஒரு முன்னுதாரணம்'' என்று கூறியுள்ளார்.