‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமாவில் நடிப்பதற்கு முகத்தின் அழகு மிகவும் முக்கியம் என்று இருந்த காலகட்டத்தில் அம்மை தழும்பு முகத்துடன் சினிமாவில் அறிமுகமாகி பல சாதனைகளை படைத்தவர் நாகேஷ். சிறு வயதில் தொடர்ச்சியாக மூன்று முறை அம்மை நோய் தாக்கியதில் அவர் முகம் அம்மை தழும்பு முகமானது. ஒரு முறை அவரிடம் அம்மை தழும்பு முகம் பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில் கல்வெட்டுகளில் பதிக்க வேண்டிய நம்பிக்கை வாசகங்கள்.
"உங்க வீட்டுல ஆட்டுக்கல் இருக்கும் பார்த்திருக்கீங்களா? அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? 6 மாசம் அல்லது ஒரு வருஷத்துக்கு ஒரு முறை ஆட்டுக்கல்லை கொத்து வைப்பாங்க. அது எதுக்கு தெரியுமா? அப்படி கொத்தி வைத்தாத்தான் மாவு நல்லா அரைபடும். இட்லியும் ருசியாக இருக்கும். என் முகமும் அந்த ஆட்டுக்கல்லை போலத்தான். ஆண்டவன் அம்மை என்கிற உளியை வைத்து முகம் முழுக்க நல்லா கொத்தி எடுத்துட்டான். அதனாலதான் எனக்கு நடிப்புங்கற இட்லி நல்லா வருது. இது ஆண்டவன் எனக்கு கொடுத்த வரம்" என்றார்.