மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் வெற்றி சந்திப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது... மூன்றாவது படமே சூப்பர் ஸ்டார் படம் என்பது யாருக்குமே கிடைத்திராத ஒரு அரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சவுந்தர்யா. எனது 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்கள் பார்த்துதான் எனக்கு இந்த வாய்ப்பை சூப்பர் ஸ்டார் வழங்கினார்.
ஆரம்பத்தில் எனக்கு தயக்கம் இருந்தது. ரஜினிக்கென்று ஒரு பார்முலா இருக்கிறது. நமது பாணியில் படம் எடுத்தால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்து. அதனால் அதனை அவர்களிடம் தெரிவித்தேன். நீங்கள் உங்கள் பாணியிலேயே எடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
ரஜினியிடம் என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னவர் சவுந்தர்யா. ரஜினிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்று கருதி நான் எழுதிய சில வசனத்தை வேண்டாம் என்று நீக்கினேன். ஆனால் ரஜினி அந்த வசனம் இருக்கட்டும் அதுதான் கபாலிக்கு அழகு என்று கூறினார். கிளைமாக்சை ரஜினி ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கருதி அதை மாற்ற நினைத்தோம். ஆனால் ரஜினி வெளிநாட்டிலிருந்து போன் செய்து கிளைமாக்சை மாற்ற வேண்டாம் என்றார். கபாலி படம் ரஜினி படமாக இருக்க கூடாது ரஞ்சித் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக நிறைய விட்டுக் கொடுத்தார்.
எனது படஙங்களில் கண்டிப்பாக அரசியல் இருக்கும். அட்டக்கத்தியிலும் அரசியல் இருந்தது. மெட்ராஸ் படத்தில் நேரடியான அரசியல் இருந்தது. இந்த சமூகம் எனக்கு சில பொறுப்புகளை தந்துள்ளது. அதனை நான் செய்து கொண்டே இருப்பேன். என்றார் பா.ரஞஞ்சித்.