ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் நேற்று தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். யுஏ சான்றிதழ் கிடைத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் எப்படியாவது யு சான்றிதழை வாங்க தணிக்கை அதிகாரியிடம் இயக்குநர் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம்.
நானும் ரெளடிதான் என்ற படத்தலைப்பில் உள்ள ரெளடி என்ற வார்த்தை தமிழ் இல்லை ஹிந்தி வார்த்தை என்பதால் அதையே காரணம் காட்டி யு வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். யு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். எனவே லாபத்தில் 30 சதவிகிதம் நஷ்டமாகும் என்பதால் நானும் ரௌடிதான் படத்தை வாங்கிய லைகா நிறுவனம் அப்ஸெட்டாகிவிட்டதாம்.
இப்படத்தின் மதுரை, சேலம் விநியோக உரிமையை வாங்கியிருந்தார் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்பு செழியன். நானும் ரௌடிதான் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் ஏற்கனவே பேசிய தொகையில் சில கோடிகளை குறைத்துக் கொள்ளும்படி லைகாவிடம் கேட்டிருக்கிறாராம்.