ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில், அதன் தலைவர் தாணு தலையிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது; தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் போட்டியிடுகின்றனர். இருதரப்பினருக்கும் இடையே, சமரசம் ஏற்படுத்த, சினிமா தயாரிப்பாளர் தாணு, சமீபத்தில் முயற்சி செய்தார்; பலன் கிட்டவில்லை. அதேநேரத்தில், சரத்குமார் அணிக்கு ஆதரவாக, தாணு செயல்பட்டதை தயாரிப்பாளர்கள் குறைகூற துவங்கி விட்டனர். சிலர், விஷாலை தொடர்பு கொண்டு, தாணு சொல்கிறார் என, எதையும் நீங்கள் கேட்க வேண்டாம்; அவர் எடுத்த முடிவு, ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு இல்லை; தாணு எடுத்த முடிவில், எங்களுக்கு உடன்பாடில்லை என, தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, சரத்குமாருக்கு ஆதரவாக, சமரச பேச்சு என்ற பெயரில், நடிகர் சங்க தேர்தலை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்; இது, அவரது தனிப்பட்ட முடிவு. போட்டியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என, விஷால் கூறிவிட்டார். எனவே, தாணுவின் முயற்சி தேவையில்லாதது; முறையற்றது.
பொதுவாக, ஒரு சங்க தேர்தலில், இன்னொரு சங்கம் தலையிடக் கூடாது என்பது விதி. சினிமாவில், 23 சங்கங்கள் உள்ளன. மற்ற சங்கங்கள் எந்த குறுக்கீடுமின்றி, சுதந்திரமாக தேர்தலை நடத்துகின்றன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தாணுவுக்கு தனிப்பட்ட முறையில் தான், சரத்குமார் ஆதரவு கொடுத்தார். அதேபோல, தாணுவும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கட்டும். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது. இதில், தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு கிடையாது.
சங்கத்தின் செயற்குழுவை கூட்டாமல், தாணு முடிவு எடுத்தது, தவறான அணுகுமுறை. இது, தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையேயான நல்லுறவை கெடுக்கும்; கசப்பான பின்விளைவுகளை ஏற்படுத்தும். தயாரிப்பாளர்களுக்கு எல்லா நடிகர்களும் தேவை; அவர்களை பிளவுப்படுத்தக் கூடாது.
நடிகர் விஷாலின், பாயும் புலி மற்றும் நடிகர் அருண்பாண்டியன் தயாரித்த, சவாலே சமாளி படங்கள், குறிப்பிட்ட நாளில் வெளியாகாது என, தாணு அறிவித்தார்; பிரச்னை ஏற்பட்டதும், முடிவை மாற்றினார்.நடிகர் சங்க தேர்தலில், யார் வெற்றி பெற்றாலும் மாலை போட்டு வரவேற்போம்.
இவ்வாறு ஏ.எல்.அழகப்பன் கூறினார்.