‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆழமாக கால்பதிக்க நினைக்கிறது. எந்திரன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கி உள்ள விசாரணை படத்தையும், தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள நானும் ரவடிதான் படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கி உள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எதிர்பார்ப்புக் குரியவை மட்டுமல்ல, பரவலான வெற்றியையும் பெற்றவையாகும். அந்த வகையில் இந்நிறுவனம் தயாரித்த படங்களான 3 , எதிர்நீச்சல் விஐபி, காக்கி சட்டை , காக்கா முட்டை ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவையாகும். குறிப்பாக காக்கா முட்டை உலகத் திரைப்படவிழாக்களில் பிரமாண்டமான வரவேற்பையும் ,உள்ளூர் திரையரங்குகளில் அதிரடி வசூலையும் பெற்ற படமாகும்.
வுண்டர்பார் பி லிட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படம் விசாரணை . வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம், 72-வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது, இப்படத்தை உலகளவில் வெளியிடும் அனைத்து உரிமைகளையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் விசாரணை படத்தின் வணிகப் பரப்பும் எதிர்பார்ப்பும் மேலும் விசாலமாகி இருக்கின்றன.
இன்னொரு படமான நானும் ரவுடிதான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா,பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது..இப்படி தனுஷ் தயாரித்துள்ள இவ்விரண்டு படங்களையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் அவற்றின் எல்லைகள் விரிவடைந்து இருக்கின்றன. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.