‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
உதயா ராமகிருஷ்ணன் இயக்கத்தில், புதுமுகங்கள் ரோஷன்-ஐரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வௌ்ளை உலகம். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வௌியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது, தமிழ் படத்திற்கு தமிழில் பெயர் வைப்பது இப்போதெல்லாம் ஆச்சர்யமாய் பார்க்க வேண்டி இருக்கிறது. கோர்ட் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்கிலம் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. யாரும் தமிழில் பேசுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் நாட்டிலேயே தமிழை சொல்லிக்கொடுக்க ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.
சினிமாவில் 10 வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் நடக்கும். அதேப்போல் சினிமா கலைஞனுக்கும் மாற்றம் தேவை. அவனிடத்தில் மாற்றம் இல்லையென்றால் அவனது வாழ்க்கை தொலைந்து போகும். ஆயுதமின்றி நடத்தப்படும் போராட்டங்கள் எல்லாம் கண்டிப்பாக ஜெயிக்கும். அதேப்போல் இந்த காதல் கதையான வௌ்ளை உலகமும் ஜெயிக்கும். இப்படத்திற்கு தமிழில் வௌ்ளை உலகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
விழாவில் பாக்யராஜ், ராதாரவி, பவர்ஸ்டார் சீனிவாசன், கேமராமேன் ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பலரும் வௌ்ளை உலகம் படத்தையும், படத்திற்கு தமிழில் பெயர் வைத்திருப்பதையும் பாராட்டி பேசினர்.