‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம்; மேடை கச்சேரிகள்; இசைக்குழு நிகழ்ச்சிகள் என, பெரும்பாலான பின்னணி பாடகர்களுக்கு உள்ள பின்னணிதான், பிரதீப் குமாருக்கும்! வந்த பாதை வழக்கமாக இருந்தாலும், தன் உச்சஸ்தாயி குரலில், 'ஆகாயம் தீப்பிடிச்சா...' என உருக வைத்தவர், தனக்கும், தன் இசைக்கும், ஒரு புதிய பாதை அமைக்கும் முனைப்பில், மிகத் தீவிரமாக இருக்கிறார். இவரின் 'காதல் கனவே..., ஆகாசத்தை நான் பார்க்குறேன்..., பூ அவிழும் பொழுதில்...' பாடல்களில், சென்னை காதலர்கள் உருகிக் கொண்டிருக்க, இவரோ, அருணகிரிநாதரின் 'திருப்புகழை' ஆராய்ந்து கொண்டிருக்கிறார். 'உலக இசை, சுதந்திர இசை கலைஞன், பயண இசையமைப்பாளர் கனவு' என, நமக்கு கொஞ்சம் விளங்காத விஷயங்கள் குறித்து இவர் கூற, 'விவரமா சொல்லுங்களேன்...', என அவருடன் உரையாட அமர்ந்தபோது...
நீங்க பாடின சினிமா பாடல்களுக்கு, இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும்னு...?
நிச்சயமா எதிர்பார்க்கலை. காரணம், நான் ஒரு மேடைப் பாடகன்; 'லா பொங்கல், யோதகா'னு, சில இசைக்குழுக்கள்ல பாடியிருக்கேன். அதுல கிடைச்ச வரவேற்பை ஒப்பிடறப்போ, இது பிரமாண்டம்! ஆனாலும், ஒரு சுதந்திர இசைக் கலைஞனா இருக்கத்தான் எனக்கு விருப்பம்!
அது என்ன சுதந்திர இசை...?
எந்தவிதமான வற்புறுத்தலும், கட்டுப்பாடும் இல்லாம உருவாக்கப்படறதுதான் சுதந்திர இசை. இது, 1960, 70களில் ஆரம்பிச்சது! 'இசைத்துறைதான் நம் வாழ்க்கை'ன்னு முடிவு பண்ணி, நான் சென்னை வந்தப்போ, இசைக்கு இங்க இவ்வளவு வாய்ப்பு இருக்குதான்னு, எனக்கு ஒரே பிரமிப்பு! அப்புறம், அமெரிக்காவுல, உலக இசைப் பற்றி நடந்த ஒரு பட்டறையில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. பல நாடுகள்; பலதரப்பட்ட இசை கலைஞர்கள்; பலவிதமான இசை... அந்த அனுபவம்தான், எனக்கு சுதந்திர இசையைப் பற்றி ஒரு விரிவான பார்வையைக் கொடுத்தது!
'திருப்புகழ்' மேல, அப்படி என்ன ஈர்ப்பு?
என் குருநாதர் ஜே.வெங்கட்ராமன், எப்பவும் திருப்புகழ் பத்தி சொல்லிட்டே இருப்பார். கொஞ்சம் கொஞ்சமா, என் மனசுக்கும், 'திருப்புகழ்' நெருக்கமாச்சு! தொடர்ந்து, அருணகிரிநாதர் பிறந்த ஸ்தலமான திருவண்ணாமலைக்கு நான் நடந்தே போனேன். அந்த அனுபவம், 'திருப்புகழ் பாடல் தொகுப்பை வெளியிட்டா என்ன?'ன்னு, யோசிக்க வைச்சது. ஆனா இப்போ, அருணகிரிநாதரைப் பற்றி, ஒரு ஆவணப்படமே தயார் பண்ணிட்டேன்!
அப்போ, சினிமாவுல பாடறது அவ்வளவுதானா?
ச்சே...ச்சே...நான் பொருளாதார ரீதியா சுதந்திரமா இருக்க சினிமாதான் உதவுது; நிச்சயமா நான் தொடர்ந்து பாடுவேன்!
நீங்களும், சந்தோஷ் நாராயணனும் நண்பர்களாமே...?
இசையில, நான் தீவிரமா இயங்கிட்டு இருந்த 2002ம் ஆண்டு; 'ஒரு பையன், கீ போர்டுலயே கிடார் வாசிக்கிறான்'னு கேள்விப்பட்டேன். 'யார்றா அந்த இசைப் புலி'ன்னு பார்க்கப் போனேன்; அந்த புலி... சந்தோஷ்! சென்னை வந்த பின், ஒண்ணா படிச்சோம்; ஒரு சின்ன ரூம், ஒரு கம்ப்யூட்டர்; இரண்டு பேரும் நாள் முழுக்க இசையமைச்சிட்டு இருப்போம். அப்பவே, டியூன் பண்ணினதுதான், 'பூ அவிழும் பொழுதில்...' பாட்டு. இதுவரைக்கும், அவரோட இசையில நான் பாடின பாடல்கள் அத்தனையுமே, யதேச்சையான சம்பவங்கள் தான்!
உலக இசையில் நம்ம ஊர் இசை குறித்து?
ஐரோப்பிய இசையைப் புரிஞ்சுக்க, நம்ம இசைதான் அடிப்படை! கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தோட ஒன்றிப்போய் இருக்கிற நம்ம இசைக்கு, எப்பவுமே தனி மதிப்பு உண்டு!
இசையமைப்பாளர் பிரதீப்பின் கனவு?
வெவ்வேறு நாடுகளோட இசையை, அந்தந்த நாட்டுக்குப் போய் கத்துக்கிட்டு, ஒரு சிறந்த பயண இசையமைப்பாளர் ஆகணும்!
கனவு நனவாகட்டும்... வாழ்த்துக்கள் பிரதீப்!