சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூர், தன் பெற்றோர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங்கிடம், தன்னைப் பற்றி, சோஷியல் மீடியாக்களில் எவ்வித போஸ்டுகளை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங், சோஷியல் நெட்வொர்க்குகளில் எப்போதும் ஆக்டிவ் ஆக உள்ளனர். ஆனால், ரன்பீர் கபூரோ அப்படி இல்லை. சமீபத்தில், ரன்பீர் கபூர் குறித்து, ரிஷி கபூர் போஸ்ட் போட்டிருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில், பாம்பே வெல்வெட் படத்தை தாங்கள் புரோமோ செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அந்தரங்க வாழ்க்கை குறித்தும், பத்திரிகையாளர்கள், ரன்பீர் கபூரிடம் கேள்வி கேட்டிருந்தனர். இதற்கு, ரன்பீர் கபூர் பயங்கர டென்சனாகி விட்டார். ஹோலி கொணடாடிய போது எடுத்த போட்டோவில், காத்ரீனாவை கத்தரித்து விட்ட நீத்து சிங், ரன்பீர்- தீபிகா படுகோனே சேர்ந்து இருந்த படத்தை போஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.