‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னை: கணவர் நேரில் வந்து வருத்தம் தெரிவித்ததால், பெண் பாடல் ஆசிரியர் தாமரை போராட்டதை கைவிட்டார்.
சினிமா பாடலாசிரியர் தாமரைக்கும், கணவர் தியாகுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தியாகு வீட்டிலிருந்து தலைமறைவானார்.'தியாகு மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும், இருபது ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்தார் என, தமிழ் சேவையாளர்கள் மூலம் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, சென்னை, சூளைமேட்டில் உள்ள, தியாகுவின் அலுவலகம் முன், தாமரையும் மகன் சமரனும் கடந்த, 27ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.வேளச்சேரியில் உள்ள முதல் மனைவியின் மகள் வீட்டில், தியாகு இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கும், பிறகு, வள்ளுவர் கோட்டத்திற்கும் தாமரை போராட்டத்தை மாற்றினார். 3 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தார்.இவரது போராட்டத்திற்கு, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பும், நேற்று முன்தினம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தன. திரைப்பட இயக்குனர் கவுதமன், புகழேந்திதங்கராஜ், பாடலாசிரியர்கள் சிநேகன், கிருதியா என, பத்துக்கும் மேற்பட்ட, சினிமா பாடலாசிரியர்கள், நேற்று வள்ளுவர் கோட்டத்திற்கு நேரில் வந்து, தாமரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
'கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும், தங்களுக்கு என்றைக்கும் சங்கத்தின் ஒத்துழைப்பு உண்டு' என, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இத்துடன், சங்க நிர்வாகிகளின் சார்பில், தியாகுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தும் தாமரையை, அவரது கணவர் தியாகு, இரவு 9:20 மணிக்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார். தாமரையின் விருப்பப்படி, நடுநிலை விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க சம்மதம் தெரிவித்தார். ''கடந்த எட்டு நாட்களாக, போராட்டத்தால், உங்களுக்கும், மகன் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும் மனவேதனைக்கு உளமார வருந்துகிறேன்,'' என்றார். பிறகு, தாமரையையும், மகனையும் வீட்டிற்கு அழைத்து சென்றதால், தாமரையின், போராட்டம், நேற்று, எட்டாவது நாளுடன் முடிவிற்கு வந்தது.