மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
யான் படத்தின் படு தோல்வியானால் நடிகர் ஜீவாவுக்கு வேறு எந்த படமும் கமிட் ஆகவில்லை. அந்தப் படத்தை தயாரித்த வகையில் 15 கோடிக்கு மேல் நஷ்டப்பட்ட ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஜீவாவும் ஒரு காரணம் என குற்றம்சாட்டியது. இந்நிலையில் பொதுவான நண்பர் எடுத்த சமரச முயற்சி காரணமாக ஜீவாவும், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் சந்தித்து பேசினர்.
இரண்டு தரப்பினரும் தங்களின் மன வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னார், யான் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார் ஜீவா. அதன்படி புதிய படத்தைத் தொடங்கிவிட்டனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் டீகே இயக்கி கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் யாமிருக்க பயமே. டீகே இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜீவா. கவலை வேண்டாம் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இதர நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ராம்நாத் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. அவரது புரடக்ஷன் மானேஜர் பெயரில் ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஆக.. சும்மா இருந்த ஜீவா தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார்.