பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
திரையுலகத்தினரின் குடும்ப வாழ்க்கையில் சில மண முறிவுகள் எதிர்பாராமல் நடந்து விடுகின்றன. பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்ற பின் அந்த நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்து அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சமீபகாலத்தில் மலையாளத் திரையுலகில் திலீப் - மஞ்சுவாரியார் விவாகரத்தும், இந்தித் திரையுலகில் ஹிருத்திக் ரோஷன் - சுசானி விவாகரத்தும் அவரவர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதற்கடுத்து அவர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய பேச்சுக்களும், சர்ச்சையும் எழ ஆரம்பித்தன. ஆனால், திலீப் - மஞ்சுவாரியால் இருவரும் அந்த விஷயத்தில் ஒரு உடன்பாடு கண்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதே சமயம், ஹிருத்திக் ரோஷனின் மனைவியான சுசானி அவரது கணவரிடமிருந்து 400 கோடி ரூபாய் சொத்துக்களை ஜீவனாம்சமாகக் கேட்பதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிருத்திக் ரோஷனுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாம். மும்பை, பெங்களூரு, சிங்கப்பூர் உட்பட பல இடங்களில் வீடுகளும் நிலங்களும்அவர்களுக்கு உள்ளதாம். அவற்றில் சிலவற்றை முக்கியமாகக் குறிப்பிட்டு சுசானி கேட்டுள்ளதாகவும் அவற்றைத் தர ஹிருத்திக் சம்மதித்துள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள். திரையுலக நட்சத்திரங்களிடையே இதுதான் மிகவும் காஸ்ட்லியான ஜீவனாம்சமாக அமையப் போகிறது என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.