பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
பாலிவுட்டில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிரித்விராஜ். ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மூன்றிலுமே வில்லனாகத்தான் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் வித்தியாசமான இரும்பு முகமூடி அணிந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அக்சய் குமார், “படத்தின் ஹீரோக்களான எங்கள் இருவரை விட வில்லன் பிரித்விராஜூக்கு தான் பஞ்ச் வசனங்கள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படம் வெளியாகும் போது அவரது வசனங்கள் தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்” என்று பிரித்திவிராஜ் முன்னிலையிலேயே அவரை புகழ்ந்து தள்ளி விட்டார்.