நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடிக்கும் ஹாலிவுட் வெப் தொடர் 'சிட்டாடல்'. வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. இந்த தொடரை ஆசியாவில் பிரபலப்படுத்தும் பணியை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மும்பையில் நடந்த விழாவில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா பேசியதாவது: சிட்டாடல் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது அதை ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினர். இது உலகை உண்மையாக இணைக்கும். வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.