சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள வெப் தொடர் ராக்கெட் பாய்ஸ். அபய் பன்னு இயக்கி உள்ள இந்த தொடரில் ஜிம் சர்ப், இஷ்வாக் சிங், ரெஜினா கெசாண்ட்ரா, சபா ஆஷாத், ரஜித் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ராய் கபூர் தயாரித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த விண்வெளி ஆராய்ச்சியின்போது அன்றைய விஞ்ஞானிகள் சந்தித்த பிரச்சினைகளை கதை களமாக கொண்டு இது உருவாகி உள்ளது. இதில் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜோ பாபா கதாபாத்திரத்தில் ஜிம் சர்ப்பும், டாக்டர் விக்ரம் சாராபாய் கதாபாத்திரத்தில் இஷ்வக் சிங்கும், பிரபல நடன கலைஞர் மிருணாளியாக ரெஜினா கஸாண்ட்ராவும், அப்துல் கலாம் வேடத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா குறித்து தவறாக சித்திரித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருவிதாங்கூரில் இருந்து மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாகவும் இதற்கு மன்னர் உடந்தையாக இருந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து மன்னர் சித்திரை திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் கூறியிருப்பதாவது: ராக்கெட் பாய்ஸ் வெப் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை உண்மைக்கு மாறாக ஆதாரமில்லாமல் தவறாக சித்தரித்து உள்ளனர். எனவே இந்த தொடருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.