ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கினார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சோசியல் மீடியாவிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. அப்படி என்றால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸை விவாகரத்துச் செய்யப் போகிறாரா? என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அதை மறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு பிரியங்காவின் தாயாரும் இதை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுப்பற்றி பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளத்தில் பயனரின் பெயர் என்னுடைய பக்கத்தில் பொருந்த வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. சோசியல் மீடியா நண்பர்களே அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பே தனது கணவர் நிக் ஜோனஸ்க்கும், தனக்குமிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.