மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் நடந்து வருகின்றன. முக்கியமான சில நடிகர்கள், நடிகைகள் பணம் கொடுத்தாவது வரவழைத்து விடுகிறார்கள். இதற்காகவே சிலர் செயல்படுகின்றனர்.
முன்னணி நடிகைகளை அழைத்து வந்தால் அவர்களுக்குத் தரும் பணத்தில் இவர்களுக்கென தனியாக கமிஷன் தருகிறார்களாம். இது தெரியாமல் சில நடிகைகள் கூட விழாக்களுக்குச் சென்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்றவர்களை விழாக் குழுவினர் ஒழுங்காகவே நடத்தவில்லையாம். பலருக்குத் தனியாக கார் கூட ஏற்பாடு செய்து தரவில்லையாம். மேலும் விழாவைப் பார்க்க குறைந்த அளவிலேயே கூட்டம் வந்துள்ளது.
சென்னையில் நடக்கும் திரைப்பட இசை விழாக்களுக்கே 500, 5000 பேர் வரும் நிலையில் ஒரு பெரிய விழா என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு 150 பேர் மட்டுமே வந்தது அங்கு சென்ற நட்சத்திரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். இனிமேல், திரைப்பட விருது விழா என்றாலே கலந்து கொள்ள யோசிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.