‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் நடிக்கிறது வரை பெரிய அளவில் கிசுகிசுவில் சிக்கவில்லை அஞ்சலி. ஆனால் அவரது தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவரைப்பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் பரவி வருகிறதாம். அங்குள்ள பிரபல நடிகர்களான மகேஷ்பாபு,வெங்கடேஷ் ஆகியோருடன் தற்போதுதான் இரண்டு படங்களில்நடித்து முடித்துள்ளார். அதற்குள் அவர்களுடன் அஞ்சலியை தொடர்புபடுத்தி விதவிதமான கிசுகிசுக்களாம். இதனால் சொந்த மொழிக்காரர்களே என்னை இப்படி அசிங்கப்படுத்துகிறீர்களே என்று அங்குள்ள மீடியாக்கள் மீது சாடியுள்ளார் அஞ்சலி.
மேலும் தற்போது ரவிதேஜாவுடன் பல்லுபு என்ற படத்தில் நடித்து வரும் அஞ்சலி, தன் மீது படிந்திருக்கும் கிசுகிசுக்களை ஏறக்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன்காரணமாக, ஆரம்பத்தில் முன்னணி ஹீரோக்களின் அபிமானத்தை பெற வேண்டி அவர்கள் அழைத்தபோதெல்லாம் பார்ட்டி வகையறாக்களில் கலந்து கொண்ட நடிகை, இப்போது அவர்களே அழைத்தாலும், படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக சொல்லி எஸ்கேப்பாகி வருகிறாராம். இப்படி பலமுறை டேக்கா கொடுத்து வருவதால் அஞ்சலியின் அபிமானிகளாக இருந்த ஆந்திராவின் முன்னணி ஹீரோக்கள் அவரை தெலுங்கு சினிமாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்று டென்சனில் கத்துகிறார்களாம்.