குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தூத்துக்குடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை வழங்குங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு டைரக்டர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டில்லியில் கடந்த 16ம்தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டில்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டியாக இருந்து இந்தியாவுக்கே உதாரணமாக திகழவேண்டும், என்று கூறியுள்ளார்.