ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து சரைனொடு படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்திற்கு பின்னர் ராம் சரணுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். ராம் சரண் மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ப்ரூஸ் லீ திரைப்படம் தோல்வியைத் தழுவிய நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளது. ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நயன்தாரா அல்லது ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா இசையமைக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் வேடத்தில் நடிக்கின்றார்.