ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற 28ந் தேதி வருகிறது. அன்றைய தினம் தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிறது. அதாவது மக்கள் கூட்டத்தால் ஹவுஸ் புல் ஆகவில்லை. புதுப் படங்களால் ஹவுஸ் புல்லாகிறது. அன்றைக்கு பரங்கி மலை ஜோதி வரைக்கும் புதுப் படங்களால் நிறைந்து வழியப்போகிறது. ஆண்டுதோறும் அரசு திரைப்படங்களுக்கு வழங்கும் மானியத்தை பெறுவதற்காக இந்த ஆண்டு பட்டியியலில் இடம் பெறுவதற்காகவும், அரசு விருது (கொடுத்தால்) பெற இந்த ஆண்டுக்குள் இருப்பதற்காகவும் இந்த தள்ளுமுள்ளு. வெளியாகிற படங்களில் விஷால், த்ரிஷா நடித்த சமர் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்ற அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். பத்தாயிரம் கோடி, கோழிகூவுது, புதுமுகங்கள் தேவை, பயபுள்ள, அகிலன், லொள்ளு தாதா பராக் பராக், பாரசீக மன்னன், கண்டுபுடிச்சிட்டேன், உண்மை, மாமன் மச்சான், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு போன்ற படங்கள் வெளிவருகிறது. இன்னும் சில படங்கள் வெளிவரலாம். அல்லது வெளிவருவதாக அறிவித்துள்ள படங்கள் பின் வாங்கலாம்.
அதுசரி... வாரத்துக்கு 3 படங்கள்தான் ரிலீசாகணுங்ற தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சுங்கோ...!