ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர், தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'ஜெயசூர்யா நடித்த 'ஆடு-2' படத்தில் இரண்டு பக்கமும் பயன்படுத்தும் வடிவிலான கருப்பு - சிவப்பு வேட்டியை ஜெயசூர்யவுக்காக உருவாக்கினார் சரிதா. அந்த வேட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
தற்போது, 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருங்கையாக நடித்துள்ள ஜெயசூர்யா, பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம். இதிலும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க இவருக்கு சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதில் புத்திசாலித்தனமாக தனது கணவர் சேலை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை விளம்பர ஹோர்டிங்குகளாக மாற்றி, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து தனது புடவை கலெக்சனுக்கு விளம்பரம் தேடி வருகிறார் சரிதா.