‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு இரவில் நடக்கும் கதை, ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை என்றெல்லாம் விதவிதமான படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக ஒரே திருவிழாவில் நடக்கும் கதையாக தயாராகி இருக்கிறது பக்கா படம். பேரரசுவின் உதவியாளர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கி இருக்கிறார். வருகிற 27ந் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து இயக்குர் சூர்யா கூறியதாவது:
இந்தப் படத்தின் கதை முழுக்க ஒரு திருவிழாவில் நடக்கிறது. அதனால் படம் முழுக்க வெளிப்புற காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபு முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு திருவிழாவில் ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த பிரச்னை திருவிழா முடிவதற்குள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.
இதற்குள் காதல், காமெடி, ஆக்ஷ்ன் என எல்லா அம்சங்களும் இருக்கிறது. காமெடி தூக்கலாக இருக்கும். இரண்டு விக்ரம் பிரபு என்பதால் ஒருவருக்கு நிக்கி கல்ராணியும், இன்னொருவருக்கு பிந்து மாதவியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர 36 நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். சத்யா இசை அமைத்துள்ளார், சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது விக்ரம் பிரபுவுக்கு முக்கியமான படமாக இருக்கும். எனக்கு என் சினிமா கேரியரை வெற்றியுடன் துவக்கி வைக்கிற படமாக இருக்கும்" என்றார்.