‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காதலில் விழுந்தேன் படத்தின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் நடித்தார் சுனைனா. ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் வம்சம், நீர்ப்பறவை படங்களில் பேசும்படியாக நடித்திருந்தார். அதையடுத்து அவர் ஸ்ரீகாந்துடன் நடித்திருந்த நம்பியார் படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். அந்த படமும் சுனைனாவுக்கு கைகொடுக்கவில்லை. அதனால் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஐராபாத்துக்கு சென்றுவிட்டார் சுனைனா.
இந்த நேரத்தில்தான் ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் இரண்டாவது நாயகி வேடத்துக்கு கமிட்டானார் சுனைனா. அந்த படத்தில் ஜீவா-காஜல்அகர்வால் நடித்தபோதும் தனக்கும் முக்கியமான வேடம் என்று சொன்னதால் கதையைகூட கேட்காமல் நடித்தாராம் சுனைனா. ஆனால் படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப்பட்டிருந்ததைப் பார்த்து ஷாக்காகி விட்டாராம். அதனால் இனிமேல் யாராக இருந்தாலும் கதையை முழுசாக கேட்டு திருப்தியாக இருந்தால மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார் சுனைனா.
அதன்காரணமாக கவலை வேண்டாம் படத்திற்கு பிறகு தன்னை படவிசயமாக தொடர்பு கொண்ட சில டைரக்டர்களிடம், முதலில் கதையை சொல்லுங்கள். அதன்பிறகு நடிப்பது பற்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் சுனைனா.