‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அப்படிச்சொன்னால் தானே டக்கென புரியும். அதைவிட்டுவிட்டு எண்பதுகளில் கொடிகட்டிப்பறந்த அம்பிகா, ராதா சகோதரிகளின் தம்பியான சுரேஷ் நாயர் இயக்கும் படம் என்றால் புரிவது சற்று சிரமம் தானே (அடடா.. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களின் மூலம் இருவரும் பாப்புலாராகிவிட்டதை கவனிக்காமல் போய்விட்டோமே).. இந்த சுரேஷ் நாயர் கொஞ்ச காலம் அநுபூதி, நீலத்தாமரா போன்ற வெகு சில படங்களில் நடித்தார். அடுத்ததாக 'மெடுல்லா ஓப்லகடா' படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். நம்ம 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தோட ரீமேக் தான் இது.
இப்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்ட சுரேஷ் நாயர், தான் உருவாக்கியிருந்த கதையின் அவுட் லைனையும் அதில் கதாநாயகியின் கேரக்டரையும் மஞ்சு வாரியாரிடம் சொல்லியிருக்கிறார். அந்த லைனில் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆனாராம் மஞ்சு வாரியர். உடனே முழுக்கதையையும் தயார் செய்துகொண்டு வருமாறும், அதற்குள் ஆஷிக் அபுவின் இயக்கத்தில் தான் நடித்துவரும் 'ராணி பத்மினி' படப்பிடிப்பு முடிவடைந்து விடுமென்றும் சுரேஷ் நாயரை உற்சாகப்படுத்தி அனுப்பியுள்ளாராம்.