‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநரும் தயாரிப்பாளரும் முட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் காரணமாக இருப்பது பிற மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸ் விற்கும்போது ஏற்படும் பஞ்சாயத்துதான். கே.டி.குஞ்சமோன் - ஷங்கர் தொடங்கி பல தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் இந்த விஷயத்தில் சண்டைப்போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட்டாக முட்டிக்கொண்டு நிற்பவர்கள்...ஜிகர்தாண்டா படத்தை தயாரித்த பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனும், அப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜும்.
சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மிமேனன் நடிப்பில் பீட்சா கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படம் - ஜிகர்தாண்டா. மதுரைப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் தயாரித்தார். இயக்குனருடன் இப்படத்திற்கான சம்பள அக்ரிமென்ட் போடும்போது சம்பளம் போக, ஹிந்தி பதிப்பு உரிமைவிற்கும்போது 40 சதவிகித பங்குகள் இயக்குனருக்கு சேரும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர்.இயக்குநர் இருவருமே உண்டாகவில்லை. ஜிகர்தண்டா ரிலீஸ் நேரத்தில் தயாரிப்பாளர்.இயக்குநர் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதால், இப்போது ஜிகர்தண்டா படத்தின் ஹிந்தி உரிமையை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்காமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்க முயன்று வருகிறாராம்.
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பாராஜ் பரபரப்பான குற்றம் சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும், இருவருக்கும் இடையில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. கடுப்பான கார்த்திக் சுப்பாராஜ், இந்த விவகாரம் தொடர்பாக பைவ் ஸ்டார் கதிரேசன் மேல் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் தற்போது கார்த்திக் சுப்பாராஜுக்கு சாதகமாக நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜிகர்தண்டா படத்தின் மொழிமாற்று உரிமையை விற்க ஜூன் 15, 2015 வரை தடை விதித்துள்ளது. அதோடு எஸ்.கதிரேசன் தரப்பு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல்களை ஊடகங்களுக்கு அறிக்கையாகவே அனுப்பி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.