‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனுஷ் நடித்த 3 படத்தில் அவரது நண்பராக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அதனால் படத்தின் பிற்பாதியில் இன்னொருவரை தனுசுக்கு நண்பனாக நடிக்க வைத்தனர்.
ஆனால் அதிலிருந்து தனுஷ்,சிவகார்த்திகேயன் இருவருமே அண்ணன்-தம்பி போன்றுதான் பழகி வருகின்றனர். அதோடு, சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் அனிருத். அதனால் தனுஷ்-சிவகார்த்திகேயனின் நண்பராகி விட்டார் அனிருத். அதனால் அதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார் அனிருத்.
அந்த இரண்டு படங்களின் பாடல்களுமே மெகா ஹிட்டடித்ததால் அனிருத்துக்கு சினிமாவில் ஒரு மரியாதை ஏற்பட்டது. விஜய்யின் கத்தி படம்கூட அந்த படங்களை வைத்துதான் கிடைத்தது. ஆனால், இப்போதோ விஜய்யின் கத்தி படம் கிடைத்ததும், அதையடுத்து சிவகார்த்திகேயனின் டாணா படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத், திடீரென்று அந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு கத்தி வேலைகளில் முழுவீச்சில் இறங்கி விட்டாராம்.
அதன்காரணமாக, டாணா பட வேலைகள் அப்படியே நின்று கொண்டிருந்ததாம். அனிருத்தின் இந்த இழுத்தடிப்பினால் சிவகார்த்திகேயனிடம் வாங்கிய கால்சீட்டும் வீணாகிக் கொண்டிருக்கிறதாம். ஆக, சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களுக்கு அவர்கள் கேட்பதற்கு முன்னமே பாடல் கேசட்டுடன் ஸ்பாட்டுக்கு சென்று கொடுத்து வந்த அனிருத், இப்போது அவர்கள் இவரைத் தேடிச் சென்று காத்துக் கொண்டிருந்தபோதும், இதோ அதோ என்று டீலில் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அந்தவகையில், பாடல்களுக்காக மாதக்கணக்கில் படநிறுவனங்களை காக்க வைக்கிற விசயத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் தம்பியாகி விட்டார் அனிருத்.