ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனது நான்கு வயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்தவர் கமல். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடியபடி சினிமாவுக்குள் வந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், தான் கதாநாயகனான பிறகு தேவர் மகன் என்ற படத்தில் அவருக்கு மகனாகவே நடித்தார்.
அந்த வகையில், சிவாஜியின் மடியில் தவழ்ந்த குழந்தை நட்சத்திரங்களில் கமல் குறிப்பிடத்தக்கவர். இதை. ஒரு மேடையில், சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபுவை விட அவரது மடியில் அதிகமாக தவழும் பாக்கியம் பெற்றவன் நானாகத்தான் இருப்பேன் என்று கமலே கூறினார்.
அப்படிபட்ட கமல், இதுவரை வருடத்திற்கு ஒரு படம் என்று இருந்தவர் இப்போது இரண்டு படங்கள் வரை கொடுத்து விடும் வகையில் தனது வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக, தனது மகளின் வயது கொண்ட ஆண்ட்ரியா உள்ளிட்ட இளவட்ட நடிகைகளுடன் இப்போதும் டூயட் பாடிக்கொண்டிருகிறார்.
இதுபற்றி ஒரு பக்க கதை படத்தின் விழாவில் நடிகர் சித்ரா லட்சுமணன் பேசுகையில்,
கமலின் மகளான ஸ்ருதிஹாசன், இந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடி வருகிறார். அதேபோல் இவரும், இப்போதைய முன்னணி ஹீரோயின்களுடன் டூயட் பாடி வருகிறார். இந்த அதிசயம் உலக அளவில் இதுவரை எங்கும் நிகழ்ந்ததில்லை. இனி நிகழப்போவதுமில்லை என்று பேசினார்.