'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்கள் வீரா, பசுபதி, மதுமிதா நடிக்கும் மொசக்குட்டி படத்தை இயக்கி வருகிறார் ஜீவன். கேரளாவில் மதம்பிடித்த யானையுடன் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கதைப்படி ஹீரோ பசுபதிக்கு மூன்று யானைகள் சொந்தமாக இருக்கும். மூன்று யானைகளை வரவழைத்து அதற்கு தினமும் வாழைத்தார் வரவழைத்து பசுபதியை விட்டு கொடுக்க வைத்து பழகிய பிறகு படப்பிடிப்பு நடத்தினோம்.
மூணாரில் படப்பிடிப்பு நடத்தியபோது வழக்கத்திற்கு மாறாக இரண்டு யானைகள் தான் வந்தது. கண்டினியூட்டி மிஸ்சாகும் இன்னொரு யானை கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். வேறு வழியில்லாமல் அந்த மூன்றாவது யானையையும் கொண்டு வந்தார்கள். வந்ததில் இருந்தே அந்த யானையின் நடவடிக்கைகள் சரியில்லை. யானைப் பாகன்கள் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நன்றாக பழகிய அந்த யானை இப்போது பசுபதியை கண்டால் முறைக்க ஆரம்பித்தது. பிறகு பாகன்களிடம் சென்று என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள் என்ற கூறினோம். அந்த மூன்றாவது யானைக்கு ஏற்கனவே மதம் பிடித்து இருந்தாகவும் சமீபத்தில்தான் அது குணமானதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு நடிக்க அழைத்து வந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அதிர்ச்சி அடைந்த நாங்கள் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டோம். பிறகு வேறு யானை ஏற்பாடு செய்து படப்பிடிப்பபை முடித்துவிட்டு திரும்பினோம். பத்து நாட்கள் மதம்பிடித்த யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது என்கிறார் ஜீவன்.