ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் சோஷியல் மீடியாவில் துல்கர் சல்மான் குறித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஆழப்புழா பகுதியில் படப்பிடிப்புக்காக சென்ற துல்கர் சல்மான், பைபாஸ் ரோட்டில், சாலை விதிகளை மீறி, வாகனங்கள் வரும் எதிர் திசையில் தனது காரை ஓட்டிச்சென்று சிக்னலில் நிறுத்தியுள்ளார். அங்கிருந்த போக்குவரத்து காவலர், காரை பின்னால் எடுத்துச்சென்று, வரிசையில் வருமாறு துல்கரிடம் கூறியுள்ளார்,
உடனே சினிமாவில் வருவது போல, படு ஸ்பீடாக காரை ரிவர்ஸ் எடுத்து, கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று, மீண்டும் சரியான திசையில் பறந்துள்ளார் துல்கர் சல்மான். அந்த பகுதியில் டூவீலரில் பயணித்த நபர் ஒருவர் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போக்குவரத்து காவலர் சொன்னதை துல்கர் சல்மான் ஏற்றுக்கொண்டாலும், அவர் தெரிந்தே சாலை விதிகளை மீறியது தவறு என்று சிலர் துல்கரின் செயலை விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “ஆழப்புழா பைபாஸ் சாலையில், குறிப்பாக இந்த சிக்னலில், முறையான கைகாட்டி பலகைகள் வைக்கப்படாததால், உள்ளூர்வாசிகளே தங்களை அறியாமல் அடிக்கடி இப்படி ஒரு விதிமீறலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி இருக்கையில் எப்போதோ ஒருமுறை இந்தப்பக்கம் வரும் துல்கர் சல்மானுக்கும் அந்த குழப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று விளக்கம் கூறியுள்ளார்.