ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமலின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா குமார். ஆனால் உத்தம வில்லன், விஸ்வரூபம்-2 என கமலின் படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த படமும் கைவசம் இல்லாத நிலையில் மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளாராம் பூஜா குமார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில், ஏற்கனவே மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதை இது. இதில் தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூஜா குமார்.
அதுமட்டுமல்ல, இந்தியில் நான்கு குறும்படங்களை இணைந்து ஆந்தாலாஜி படமாக உருவாகும் 'தி இன்விசிபில் மாஸ்க்' என்கிற படத்தில் ஒரு குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்க, அதில் நாயகியாக பூஜா குமார் தான் நடித்துள்ளாராம்.