ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் எப்போதெல்லாம் நல்ல படைப்புகள் வெளியாகின்றதோ அப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து அவற்றை முதல் ஆளாக பாராட்டும் நபர் யாரென்றால் அது அது அனுராக் காஷ்யப்பாகத்தான் இருக்கும்.. பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் எப்போதுமே தென்னிந்திய மொழிப்படங்களின் மீது தனது பார்வையை ஓட்டிக்கொண்டே இருப்பவர்.. அந்தவகையில் நிவின்பாலி, துல்கர் சல்மான், அங்கமாலி டைரீஸ், செக்ஸி துர்கா என மலையாள நல்ல படங்கள், அதில் சிறப்பாக நடித்த நட்சத்திரங்கள் என தன்னை கவர்ந்த யாரையும் பாராட்ட அவர் தயங்கியதே இல்லை.
சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை சந்தித்த அனுராக் காஷ்யப் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு “இன்றைய தினம் ஒரு லெஜென்ட்டை சந்தித்ததால் சிறப்பானதாக அமைந்தது” என குறிப்பிட்டுள்ளார்.. இந்த சந்திப்பை தொடர்ந்து மோகன்லாலை அனுராக் காஷ்யப் பாலிவுட்டுக்கு இழுக்கிறாரா என்கிற யூகங்கள் கிளம்பியுள்ளன.. அனுராக் காஷ்யப் ஏற்கனவே நிவின்பாலி நடிக்க இருக்கும் 'மூத்தோன்' படத்தின் திரைக்கதை ஆசிரியராக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.